நவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் .
இந்த பள்ளிவாசல் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் முகமதியர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்த பொழுது,அப்போதய தளபதி முகமது அலி வரி வசூல் செய்ய நிர்மாணிக்கப்பட்ட இடம்.
இங்கு வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே செல்ல அனுமதி இன்றளவும் அனுமதி கிடைப்பதில்லை.
இந்த பள்ளிவாசல் பேட்டையிலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது. தொழுகைகள் நடைபெறுகிறது .ஆனால் குறைந்த அளவு இஸ்லாமிய மக்களே கலந்து கொள்கின்றனர்
கடந்த காலத்தில் மிகவும் பெயர் போன நவாப் சாகிப் பள்ளிவாசல் இன்று பராமறிப்பின்றி பொலிவிழந்து தொய்வாக காணப்படுகிறது
. இது மிக வருத்தத்திற்குரியது.இந்தப் பள்ளிவாசலில் 60ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு கல்வெட்டில் பெர்ஷிய மொழி வெட்டப்பட்டு இருந்ததாக அந்த பள்ளிவாசலின் கடைசி பாதுகாவலர் தனது குடும்பத்தாரிடம் சாகும் தருவாயில் குறிப்பிட்டதாக இங்கு பரவலாக கூறப்படுகிறது.
அந்தக் கல்வெட்டு ஒரு முறை உடைக்கப்பட்டு விட்டது என்றும் அப்பொழுதே பஞ்சாயத்தெல்லாம் கூட்டினார்கள் என்றும் வாய்மொழி வரலாறு பரவலாக வழக்கில் உள்ளது.
இந்தப் பள்ளிவாசலுக்கு தற்போது வந்து கொண்டிருக்கும் நபர்கள் மிகவும் குறைவானவர்கள் என்பது வருந்த தக்கது.