இடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம்
இங்கு வருடாவருடம் பெரியவர் பீர்முகமது நினைவுநாளில் அவரின் ஞானப்புகழ்ச்சி பாடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது.சுற்று வட்டாரத்தில் இருந்து மதவேறுபாடின்றி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றனர்.
மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் இறுதி நாளில் ஞானப்புகழ்சி பாடல்கள் பாடப்படுகின்றன. மேலும் இந்தப் பாடல் எட்டு மணிநேரம் தொடர்ச்சியாக ஆறு பேர் கொண்ட குழுவினால் சுழற்சி முறையில் இரவு ஒன்பது மணியளவில் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை நான்கு மணிக்கும் மேலாக பாடப்படுகிறது.
இந்த ஞானப்புகழ்ச்சி பாடல்கள் முழுவதும் தமிழிலே பாடப்பட்டு வருகிறன்றது.
அத்துடன் அந்த நாளில் மக்கள் பெருமளவு தக்கலையை ஆக்கிரமித்து கோலாகல கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அந்த ஞானப்புகழ்சியைப் பாடலாகப் பாடும் அனைவரும் பரம்பரை பரம்பரையாக பாடிவருகின்றனர். அவர்கள் அனைவரும் 45 வயதுக்கும் மேலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றாண்டிற்கான வரலாற்றைப் பேசும் பெரியவர் பீர்முகது அவர்களின் ஞானப்புகழ்ச்சி கன்னியாகுமரி , நாகர்கோவில் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள மக்களையெல்லாம் ஒன்று சேர்க்கும் வரலாற்று நினைவு நிகழ்வாகும்.
அந்த நினைவிடம் சுமார் 13ஏக்கர் நிலப்பரப்பில் அரண்மனை போன்ற கட்டமைப்பில் கம்பீரமாக தோற்றம் கொண்டுள்ளது. திருவிழா நாளான அந்த பத்து நாட்களும் தக்கலையையே ஒரு கண்ணியத்துடன் காணப்படுகிறது.