Home திருநெல்வேலி சிந்தா பள்ளிவாசல் – நெல்லை

சிந்தா பள்ளிவாசல் – நெல்லை

by admin
0 comment

சிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து மக்களே அதிகம் வசிக்கின்றனர். இந்த ​ப்​பள்ளி வாசல் ​புதியது, ​ ​பழையது என்று ​இரண்டாக உள்ளது . ​ ​புதியது நிர்மாணிக்கப்பட்டு,​​ ​பழைய ​ பகுதி​ பூட்டி வைக்கப்பட்டுள்ளது.  பாளையங்கோட்டை அருகே உள்ள இந்த​ப்​பள்ளிவாசல் மிகவும் சிறப்பு பெற்றது. ​

சிந்தா (3)

Picture 2 of 5

​குழந்தை வரம் வேண்டி இங்கு வியாழன் அன்று தொழுகை முடிந்தவுடன் அவர்களுக்காகச் ​சிறப்பு பிரார்த்தனை செய்யவும் இங்கு உள்ள இசுலாமியர்கள் தயாராக உள்ளதால் இங்கு இந்து மக்கள் அதிகமாக வருகின்றனர். இந்த பள்ளிவாசலின் உள்ளே ஒரு கொடிமரம் வைக்கப்பட்டு,​ அதை​ச்​சுற்றிலும் ஊது​வத்திகள்​,  ஜவ்வாது போன்றவைகள் இறைவனுக்காகப் ​படைக்கப்படுகின்றன .

இ​ங்குள்ள ​  கொடிமரம்​, முன்னர் பர்மாவிலிருந்து  பஞ்சம் பிழைக்க வந்த ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பம் வந்த படகின் கொடிமரம்தான் என்கிறார் வழக்கறிஞர். திரு .எம்.எம்.தீன் அவர்கள் .

இந்த​ப்​ புதிய பள்ளிவாசலிலே எல்லா நிகழ்வுகளும் தொழுகைகளும் நடைபெறுகிறது. பழையபள்ளிவாசல் சிறப்பு பூஜை காலங்களில் மட்டும் திறக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment